Thursday 16 March 2017

பிரதமரின் முத்ரா கடன் பெறுவது எப்படி ?


முத்ரா கடன் பெற தேவையான ஆவணங்கள் 


1.  MUDRA Loan Application
2.     Business plan
3.     Proof of Identity like PAN / Drivers License / Aadhaar Card / Passport and more.
4.     Residence proof like recent telephone bill / electricity bill or property tax receipt and more.
5.     Applicant’s recent photograph less than 6 months old
6.     Quotation of machinery or other items to be purchased
7.     Name of supplier or details of machinery or prices of machinery
8.     Proof of identity / address of the business like tax registration, business license and more.
9.     Proof of category like SC/ST/OBC/Minority, if applicable. 

        

       

Types of Business Debts


கடன் வகைகள்

அடமானமில்லாத கடன் ( Unsecured Loan )

  • ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும்

  • ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும்  சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் (  Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள்

  • ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.



அடமானக் கடன் ( secured Loan )


  •  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும்.

  • ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.


What are Must Be in the Business Plan

பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?

நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப் பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.


இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள்.   Debt Service Coverage Ratio என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.

Muthra Loan Scheme for Business


முத்ரா வங்கி திட்டம்:


சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குவதற்காக 'முத்ரா வங்கி' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கடந்த மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக 'முத்ரா வங்கி' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் 'முத்ரா வங்கி' திட்டத்தை பிரதமர் மோடி, இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார்.
சிறு தொழில் முனைவோருக்கான 'முத்ரா வங்கி' திட்டம் தொடக்கம்!


 சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்குவதற்காக 'முத்ரா வங்கி' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கடந்த மத்திய பட்ஜெட்டில் சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக 'முத்ரா வங்கி' தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் 'முத்ரா வங்கி' திட்டத்தை பிரதமர் மோடி, இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார்.



அப்போது அவர் பேசுகையில், ''நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சிறு தொழிலை ஊக்குவிப்பதுதான் நாட்டின் தற்போதைய தேவையாக இருக்கிறது. இதற்காக ரூ.200 கோடி முதலீட்டில் 'முத்ரா வங்கி' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வணிகர்கள் கடன் உதவி பெறலாம். மேலும், சிசு திட்டத்தில் ரூ.50 ஆயிரம் வரையும், கிஷோர் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரையும், தருண் என்ற திட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறு தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி வழங்கப்படும்.


இதன் மூலம் மொத்தம் 5.77 கோடி சிறு மற்றும் குறு வணிகர்கள் பயன் அடைவார்கள். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் நாட்டில் 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், 'முத்ரா வங்கி' திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கும் உதவிகள் வழங்கப்படும்'' என்றார் .