Saturday 18 March 2017

Business Loans For SMES

முத்ரா அட்டை:

இத்திட்டம் மூலம் கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா   அட்டை வழங்கப்படும்இந்த அட்டையை மூலப்பொருட்கள் வாங்கும் 
போது கிரடிட் கார்டு போல பயன்படுத்தலாம்.இந்த கார்டு மூலமாக கடன்   தொகையில் 10% அதிகபட்சம் Rs.10,000 வரை பயன்படுத்தலாம்.

கடன் வழங்குவதற்கு மறுத்தால்....
வங்கி மேலாளர் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவோ அல்லது கடன்   மறுக்கும் பட்சத்திலோ நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம்.  வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்ததிட்டத்தில் வரும்   குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம்.. 

 உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.
முக்கிய குறிப்பு:
1.வங்கியின் மேலாளரை அனுமதி பெற்று பின் சென்று பார்க்கவும்   மாலை 4.00 மணிக்கு மேல் அனுமதி பெற்றுபார்த்தல் நல்லது
2.மேலாளரை பார்க்கும் போது அனைத்து நகல்களுடன் பார்ப்பது 
நல்லதுநீங்கள் வேண்டுகின்ற கடன் தேவைக்கு சரியான 
விளக்கத்தை   அவரிடம் தருவதற்கு தயாராகசெல்லுங்கள்.
3.மேலாளரின் முடிவே இறுதியானது.
4.மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில்       பார்க்கவும்.

நோடல் அதிகாரிகளின் பெயர்முகவரி மற்றும் தொடர்பு எண்கள்
அனைத்தும் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளது.

Unsecured Business Loans and Banks

கடன் வழங்கும் வங்கிகள்
  •  27 Public Sector Banks
  •  17 Private Sector Banks
  •  31 Regional Rural Banks (RRBs)
  • 04 Co-operative Banks
  • 36 Micro Finance Institutions (MFIs)
  • 25 Non Banking Financial Companies (NBFCs)
விண்ணப்பத்தில் என்னென்ன ஆவணங்கள் இணைக்கவேண்டும்?
1) அடையாள சான்று ( வாக்காளர் அட்டைஓட்டுனர் உரிமம்,பான் கார்டு
ஆதார் அட்டைபாஸ்போர்ட்)
2) இருப்பிட சான்று (நடப்பு மாதத்தில் கட்டிய தொலைபேசி ரசீது,அல்லது 
மின்சார கட்டண ரசீது அல்லது வீட்டு வரி ரசீது)
3) சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

4) இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான 
விலைப்பட்டியல் ரசீது Quotation 

5) சப்ளையர் விபரங்கள்

6) தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் அதன் உரிமம்

7) .பி.சிசாதிச் சான்றிதழ்

மேற்கண்ட விபரங்கள் தவிர சில வங்கிகள் அவர்களின்விதிமுறைகளுக்கு
 ஏற்ப இன்னும் சில தேவையான சான்றிதழ்களை தங்களிடம் கேட்பதற்கு
 வாய்ப்புண்டு.

Business Loan Eligibility

ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்கப்படுமா?

·               
     ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டுஆனால் 
அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் 
கணக்காக இருக்க கூடாது.
·                     
இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY)மற்றும் 
தனிநபர் ஜாமீன் தேவையில்லை.
·                   
  கடன் அதிக பட்சமாக பத்து லட்சம் வரை பெறலாம்.
·                  
   ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு 
இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும்அதிகபட்சம் எத்தனை பேருக்கு 
வேண்டுமானாலும் வழங்கலாம்.
·                   
  உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு 
வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.
·                   
 அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம்இருந்த போதிலும்
உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்தவங்கியிலேயே
 முயற்சிக்கவும்.

·  விலைப் பட்டியலுக்கான Quotation- னுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும்
 உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்

·                    இந்த கடன் திட்டத்திற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் ஏதும் இல்லைவருடம் முழுவதும் வங்கிகள் இந்தக் கடனை வழங்கும்.

Documents Required for business Loan

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற என்ன செய்ய வேண்டும்?
  
·              இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று 
விண்ணப்ப படிவம் பெறலாம்மேலும் PMMY APPLICATION FORM என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப
விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

·                   கண்டிப்பாக 18 வயது முடிந்திருக்க வேண்டும்

·                     இத்திட்டத்தில் மூன்று பிரிவுகளில் கடன் பெறலாம்.அதனைவங்கியின் மேலாளர் உங்கள் தொழிலை கொண்டு முடிவு செய்வார்.

·                      இது முழுக்க முழுக்க ஒரு தொழில் கடன் திட்டம் மட்டுமே.

·                     இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயக்கப்படும்.

·                     நீங்கள் வாங்கும் கடனை அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை திருப்பி 
செலுத்தலாம்கடனை EMI மூலம் வங்கி கணக்கிட்டு அறிவிக்கும்.

·                     நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில்,தொழில் 
நன்றாக நடக்கும் போது மேற்கொண்டு அதனைஅபிவிருத்தி அல்லது 
நடைமுறை  மூலதனம் பெற வங்கிகள்தொடர்ந்து கடன் வழங்கும்.